Wednesday, December 24, 2008

கடைக்கண் பார்வை


மயானமாகியது பெண்ணே,

என் மனம்,நீ 'இல்லை' என்று சொன்ன பதிலில்!

புல்வெளியில் பனித்துளியாய்..

இதோ,புதியவளின் கடைக்கண் பார்வை.

உன்னுள் அடக்கம்!


என் மனமே,
ஜாக்கிரதையாய் இரு!
எந்நேரமும் உன்னுள் ஆனந்த புயல் வீசலாம்..
அவன் மின்சாரப் பார்வை பட்டு.


என் இதயமே,
உன் துடிப்புகளை இப்பொழுதெல்லாம் என்னால் கேட்க முடிவதில்லையே? காரணம் .. நீ அவனிடம் இருப்பதால் தானோ?


என் உயிரே,
உன் உடம்பு வெறும் காற்றில்லா பெட்டகம் தானோ?
உணர்வுகள் நிகழ்வில் நில்லாமல்,
கனவுலகில் நினைவாக சஞ்சரிப்பதால் தான் ஏனோ..

என் உயிரே ! உனை அவன் கண்களில் தேடுகிறேன்.

Thursday, December 11, 2008

படித்ததில் பிடித்தது..


வாகனம் ஓட்டும் போது,செல் போன் அடித்தால் எடுக்காதே ... அழைப்பவர் யமனாகக் கூட இருக்கலாம்!

Wednesday, March 19, 2008

ரோஜா ..


பாறையில் பூத்த ரோஜாக்கள் ..
குப்பை தொட்டியில் பிஞ்சுகள் !

Tuesday, March 18, 2008

ஹைகூ ..




தோற்றம் : உன் பார்வை பட்ட அன்று

மறைவு : உன்னை காணாத பொழுதெல்லாம் !

Monday, March 17, 2008

...கனவே கலைந்துவிடு !!

மருந்தென நினைத்து விஷத்தை அருந்திவிட்டேன்.. துடிக்கிறேன் ..தவிக்கிறேன் .. இதயம் வலிக்க !
பறக்க நினைத்து .. கூண்டை எறித்தேன் .. சிறகுமல்லவா சேர்ந்து எறிந்தது !

வெற்றிப் படிகளில் ஏறும் வாய்ப்பு உண்டு.. ஆனால் கால்கள் இன்றி அமைதியாய் அழுகின்றேன்...அழுகின்றேன் ...

நிசப்தம் கலைந்தது .. நிதானம் பிறந்தது .. நிகழ்வு அல்ல .. கனவும் அதிபயங்கரம் என்றுண்ர்ந்தேன் !