Wednesday, December 24, 2008

கடைக்கண் பார்வை


மயானமாகியது பெண்ணே,

என் மனம்,நீ 'இல்லை' என்று சொன்ன பதிலில்!

புல்வெளியில் பனித்துளியாய்..

இதோ,புதியவளின் கடைக்கண் பார்வை.

உன்னுள் அடக்கம்!


என் மனமே,
ஜாக்கிரதையாய் இரு!
எந்நேரமும் உன்னுள் ஆனந்த புயல் வீசலாம்..
அவன் மின்சாரப் பார்வை பட்டு.


என் இதயமே,
உன் துடிப்புகளை இப்பொழுதெல்லாம் என்னால் கேட்க முடிவதில்லையே? காரணம் .. நீ அவனிடம் இருப்பதால் தானோ?


என் உயிரே,
உன் உடம்பு வெறும் காற்றில்லா பெட்டகம் தானோ?
உணர்வுகள் நிகழ்வில் நில்லாமல்,
கனவுலகில் நினைவாக சஞ்சரிப்பதால் தான் ஏனோ..

என் உயிரே ! உனை அவன் கண்களில் தேடுகிறேன்.

Thursday, December 11, 2008

படித்ததில் பிடித்தது..


வாகனம் ஓட்டும் போது,செல் போன் அடித்தால் எடுக்காதே ... அழைப்பவர் யமனாகக் கூட இருக்கலாம்!

Wednesday, March 19, 2008

ரோஜா ..


பாறையில் பூத்த ரோஜாக்கள் ..
குப்பை தொட்டியில் பிஞ்சுகள் !

Tuesday, March 18, 2008

ஹைகூ ..




தோற்றம் : உன் பார்வை பட்ட அன்று

மறைவு : உன்னை காணாத பொழுதெல்லாம் !

Monday, March 17, 2008

...கனவே கலைந்துவிடு !!

மருந்தென நினைத்து விஷத்தை அருந்திவிட்டேன்.. துடிக்கிறேன் ..தவிக்கிறேன் .. இதயம் வலிக்க !
பறக்க நினைத்து .. கூண்டை எறித்தேன் .. சிறகுமல்லவா சேர்ந்து எறிந்தது !

வெற்றிப் படிகளில் ஏறும் வாய்ப்பு உண்டு.. ஆனால் கால்கள் இன்றி அமைதியாய் அழுகின்றேன்...அழுகின்றேன் ...

நிசப்தம் கலைந்தது .. நிதானம் பிறந்தது .. நிகழ்வு அல்ல .. கனவும் அதிபயங்கரம் என்றுண்ர்ந்தேன் !

Tuesday, March 11, 2008

தாமதமாய் ..

இறைவனிடம் கேட்டேன் ..

வார்த்தை வேண்டுமென்று;

தாமதமாய் கொடுத்தான் ..

கொடுத்ததெல்லாம் கவிதை!

Monday, March 10, 2008

....ஒரு மிஸ்ஸ்ட் கால் !

எழுந்திரு நண்பனே..

நான் விழித்துவிட்டேன்;

என்னிடம் பணம் காலி..

ஒரு முறை எனைக் கூப்பிடு;

மிஸ்ஸ்ட் கால் !

வீடு சென்று சேர்ந்துவிட்டேன் அன்பே,

நீ இன்னும் வராமல் என்ன செய்கிறாய்?

ஆஹா ! .. எத்தனை எத்தனை அர்த்தங்களில் .. இந்த ஒரு மிஸ்ஸ்ட் கால் ?

வார்த்தைகளை அநியாயமாய் சுருக்கி,

வருமானத்தை அதிகமாய் பெருக்கும்..

மாடர்ன் உலகின் .. அழகிய மிஸ்ஸ்ட் கால் !

Tuesday, March 4, 2008

உன் கூந்தல் ..


தென்றல் தீண்டிவிட்டு சென்ற சந்தோஷத்தில்...

அதோ அவற்றின் ஆனந்த நர்த்தனம் !

சுனாமி




இதமாய்..ஒரு தீண்டல்

சுட்டெரித்த கத்தரி வெயிலில்..
ஜில் ஜில் பார்வையால்..
இதயத்திற்கு சொற்கம் காட்டினாய் !
பெண்ணே,
உன் விழிகள் என்னை,
இதமாய் தான் தீண்டின..
அதற்கே இப்படி ஆனேனோ!


Monday, April 23, 2007

Thursday, April 19, 2007

வருந்துகிறேன் உனக்காய்..


சிரு சிரு நிமிடங்கள் சேர்த்தேன்
சின்ன சின்ன ஆசைகள் வளர்த்தேன்
வாழ்க்கை யெனும் பூங்கா அமைக்க,
உயிரே உயிரே என்னை பிரிந்ததேனோ
பழயன கழிதல் எனக்கும் பொருந்துமோ!
புதியவளாய் அவள் உன் வாழ்வில்..

..துடிக்கிறேன் நான் எனக்காய் அல்ல,
என்னை இழந்த முட்டாளே உனக்காய்!
என் ஆழ்ந்த அனுதாபங்க்ள்
நீ இழந்த பெரும் வாழ்விற்காய்!

ஒருமுறை மனக்கதவுகளை திறந்தேன் நான்
ஒரு சுனாமியை போல்,எட்டி பார்த்து சென்றாய்..
அழுகையில்லை...கண்ணீரில்லை...
லேசாய் ஒரு வலி மட்டும்!

தாழிடுகிறேன் கோட்டை கதவுகளை
நிரந்தரமாய்..நிரந்தரமாய்..நிரந்தரமாய் !!!

Thursday, April 12, 2007

நானும் ஒரு கலிலியோ....


நாம் பிரிந்த பின் அல்லவா,

அடிக்கடி சந்திக்கிறேன் உன்னை ???!!!

கலிலியோ போல் சிந்திக்கிறேன் பெண்ணே,

ஏன் இவ்வுலகம் உருண்டை என்று !

Monday, December 18, 2006

hai-கூ


கணபதி பப்பா மோரியா

சக்தியின் வடிவே சரணம் உமக்கே
சரணம் சரணம் சரணம் உமக்கே
சாந்தியும் நீயே சரணமும் நீயே
சிவன் பார்வதி தன்னை சுற்றி வந்த மூலவா
ஆதியும் நீயே அந்தமும் நீயே
அக்னி கொளுந்தே அருட்பெருஞ்ஜோதியே
உன் திருவடிப்பாதம் தன்னை அடயவழி ஒன்றை சொல்வாய்ஞானவடிவே ...ஒலியான என் திருமூர்தியே
ஓம் எனும் நாமம்விருட்சகம் போல் எனை காக்க
அருட்புரிவாயே தினமும் நீயே
விநாயகநே வின்நாயகநே
சரணம் சரணம் சரணம் உமக்கே !

தாய்மை ( Motherhood )

மகளே...

நீ சுவாசிக்கும் ஒவ்வொரு முறையும்
என் கனவுக் கோட்டை வளர்ந்து வருகின்றது,

அதை நிறைவு செய்யாவிடினும்
அழித்து விடாதே.. ==============================================
For all my non-tamil friends,here it goes..

My dearest babydoll,
With every breath of yours,
Iam building a castle of my dreams about you,
Even if you dont turn them into a reality,
Plz be careful not to destroy my beautiful castle.