Wednesday, December 24, 2008

கடைக்கண் பார்வை


மயானமாகியது பெண்ணே,

என் மனம்,நீ 'இல்லை' என்று சொன்ன பதிலில்!

புல்வெளியில் பனித்துளியாய்..

இதோ,புதியவளின் கடைக்கண் பார்வை.

உன்னுள் அடக்கம்!


என் மனமே,
ஜாக்கிரதையாய் இரு!
எந்நேரமும் உன்னுள் ஆனந்த புயல் வீசலாம்..
அவன் மின்சாரப் பார்வை பட்டு.


என் இதயமே,
உன் துடிப்புகளை இப்பொழுதெல்லாம் என்னால் கேட்க முடிவதில்லையே? காரணம் .. நீ அவனிடம் இருப்பதால் தானோ?


என் உயிரே,
உன் உடம்பு வெறும் காற்றில்லா பெட்டகம் தானோ?
உணர்வுகள் நிகழ்வில் நில்லாமல்,
கனவுலகில் நினைவாக சஞ்சரிப்பதால் தான் ஏனோ..

என் உயிரே ! உனை அவன் கண்களில் தேடுகிறேன்.

Thursday, December 11, 2008

படித்ததில் பிடித்தது..


வாகனம் ஓட்டும் போது,செல் போன் அடித்தால் எடுக்காதே ... அழைப்பவர் யமனாகக் கூட இருக்கலாம்!