Thursday, April 19, 2007

வருந்துகிறேன் உனக்காய்..


சிரு சிரு நிமிடங்கள் சேர்த்தேன்
சின்ன சின்ன ஆசைகள் வளர்த்தேன்
வாழ்க்கை யெனும் பூங்கா அமைக்க,
உயிரே உயிரே என்னை பிரிந்ததேனோ
பழயன கழிதல் எனக்கும் பொருந்துமோ!
புதியவளாய் அவள் உன் வாழ்வில்..

..துடிக்கிறேன் நான் எனக்காய் அல்ல,
என்னை இழந்த முட்டாளே உனக்காய்!
என் ஆழ்ந்த அனுதாபங்க்ள்
நீ இழந்த பெரும் வாழ்விற்காய்!

ஒருமுறை மனக்கதவுகளை திறந்தேன் நான்
ஒரு சுனாமியை போல்,எட்டி பார்த்து சென்றாய்..
அழுகையில்லை...கண்ணீரில்லை...
லேசாய் ஒரு வலி மட்டும்!

தாழிடுகிறேன் கோட்டை கதவுகளை
நிரந்தரமாய்..நிரந்தரமாய்..நிரந்தரமாய் !!!

2 comments:

Prabha said...

Some times I hear myself in your words. Very touching.

Excellent pencil sketch.

Shoba Sharat said...

Sketch .. Sutufied ! Words mattum thaan ennathu.Nwyz,thanks n keep reading machi..